• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

குடிநீர் இணைப்பிற்காக சாலைகளை சேதப்படுத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் – எஸ்.பி.வேலுமணி

September 23, 2019

கோவை மாவட்டம் முழுவதும் வறட்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடுகளுக்கான புதிய குடிநீர் இணைப்பு நாளை முதல் வழங்கப்படும் எனவும், குடிநீர் இணைப்பிற்காக சாலைகளை சேதப்படுத்தினால் உரிமம் இரத்து செய்யப்படும் எனவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கலையரங்கத்தில் மாநகராட்சியில் பணியாற்றும் நிரந்தர துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,

கோவை மாவட்டம் முழுவதும் வறட்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடுகளுக்கான புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும். மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், பேரூராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாக விண்ணப்பதால் பிரச்சணை இல்லாமல் எளிதாக கிடைக்கும். குடிநீர் இணைப்பிற்காக சாலைகளை சேதப்படுத்தினால் உரிமம் இரத்து செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

மேலும்,சூயஸ் குடிநீர் திட்டம் திமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது எதிர்கட்சி கொண்டு வந்தாலும் நல்ல திட்டம் என்பதால் இத்திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம் சூயஸ் திட்டம் தொடர்பாக பல்வேறு புரளிகளை பரப்பி வருகின்றனர்.சூயஸ் நிறுவனத்திற்கு கட்டண உயர்த்தும் அதிகாரம் கிடையாது. குடிநீர் விநியோக உரிமை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க