• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குடிசைப்பகுதிகளிலும் சிசிடிவி காமிராக்கள் பொறுத்த வேண்டும் – கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

April 29, 2019 தண்டோரா குழு

துடியலூரில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு நிவாரணத்தொகையை அதிகரித்து வழங்க வேண்டும் என கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கிதனர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

துடியலூர் பகுதியில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யபட்ட விவகாரத்தில் தமிழக அரசு வழங்கிய ரூ.300000 லட்சம் நிவாரணத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் எனக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில் பாலியல் குற்றங்களை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குடிசைப்பகுதிகளில் சிசிடிவி காமிராக்களை பொருத்தி குற்றங்கள் நடைபெறா வண்ணம் கண்காணிக்க வேண்டும். பாலியல் குற்றங்கள் நடைபெறும் இடங்களை கண்டறிந்து சிறப்பு கவனம் செலுத்துவதோடு அப்பகுதிகளில் புறக்காவல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இதேபோல் மாவட்ட அளவில் பொதுக்கழிப்பறைகளை அதிகரிக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

மேலும் படிக்க