• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குஜராத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கார் மீது கல்வீசி தாக்குதல்

August 4, 2017 தண்டோரா குழு

குஜராத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி கார் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி குஜராத்தில் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்றார். அப்போது, தனீரா பகுதியில், ராகுல்காந்திக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதனைத்தொடர்ந்து, ராகுல்காந்தி பன்ஸ்கந்தா பகுதியில் வந்த போது அவரது கார் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தினர்.

இதில் அவரது கார் கண்ணாடி நொறுங்கியது. எனினும் ராகுல்காந்திக்கு எந்த காயமும் ஏற்ப்படவில்லை. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் பாஜகவினர் தான் திட்டமிட்டு கல் வீசி தாக்குதல் நடத்தியாக குற்றம் சாற்றினர். மேலும், இது குறித்து முதல்வர் பதில் அளிக்க வேண்டும். இந்த செயலை ஏற்க முடியாது. கல்வீச்சில், ராகுல் பாதுகாவலர் ஒருவர் காயமடைந்துள்ளதாக கூறியுள்ளனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க