• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

குக்கர் சின்னம் இல்லாவிட்டாலும் எந்த சின்னம் கிடைத்தாலும் வெற்றி பெறுவோம் – கோவை அமமுக வேட்பாளர்

March 26, 2019 தண்டோரா குழு

கோவை அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் அப்பாதுரை, மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கோவை மக்களவை தொகுதியில் அப்பாதுரை போட்டியிடுகிறார். வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த அப்பாதுரையோடு, செஞ்சிலுவை சங்கத்தில் இருந்து அமமுக மற்றும் எஸ்டிபிஐ கட்சியினர் ஊர்வலமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை வந்தனர். இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணியிடம் அப்பாதுரை வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சேலஞ்சர் துரை, சின்னசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அப்பாதுரை,

குக்கர் சின்னம் இல்லாவிட்டாலும் எந்த சின்னம் கிடைத்தாலும் 40 தொகுதிகளிலும் அமமுக வெற்றி பெறுமென நம்பிக்கை தெரிவித்தார். மக்கள் விரும்பும் திட்டங்களை கொண்டு வருவோம் எனவும், மக்கள் எதிர்க்கும் திட்டங்களை தடுப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க