December 17, 2018
தண்டோரா குழு
உலகம் முழுவதும் வரும் 25ம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கிடையில்,கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து இரவு நேரங்களில் கிறிஸ்மஸ் தாத்தா கேரல்ஸ் பாடல்களை பாடி இயேசு பிறந்த நாளின் சிறப்புகளை எடுத்துரைத்து வருகின்றனர்.
இந்நிலையில் உதகையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளும் ஒருங்கிணைந்து கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னோட்டமாக SANTA CLAUS என்றழைக்கப்படும் கிறிஸ்மஸ் தாத்தா பவனி நிகழ்ச்சி நடைப்பெற்றது. உதகை மறை மாவட்ட ஆயர் அமுல்ராஜ் தாமஸ் ஆலயத்தில் துவக்கி வைத்த இந்த ஊர்வலம் மத்திய பேரூந்து நிலையம், மணிகூண்டு, கமர்சியல் சாலை நகரின் முக்கிய வழியாக தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்துவர்கள் துதி பாடல்களை பாடி வந்தனர். கடுங்குளிர் நிலவிய போதிலும் ஏராளமான மக்கள் சாலையில் இருபுறமிருந்து கிறிஸ்மஸ் தாத்தா ஊர்வலம் வருவதை கண்டு களித்தனர்.