• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு உதகையில் நடைப்பெற்ற சாண்டாகிளாஸ் ஊர்வலம்

December 17, 2018 தண்டோரா குழு

உலகம் முழுவதும் வரும் 25ம் தேதி கிறிஸ்மஸ் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது. இதற்கிடையில்,கிறிஸ்மஸ் பண்டிகையை வரவேற்கும் வகையில் டிசம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து இரவு நேரங்களில் கிறிஸ்மஸ் தாத்தா கேரல்ஸ் பாடல்களை பாடி இயேசு பிறந்த நாளின் சிறப்புகளை எடுத்துரைத்து வருகின்றனர்.

இந்நிலையில் உதகையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ சபைகளும் ஒருங்கிணைந்து கிறிஸ்மஸ் பண்டிகைக்கு முன்னோட்டமாக SANTA CLAUS என்றழைக்கப்படும் கிறிஸ்மஸ் தாத்தா பவனி நிகழ்ச்சி நடைப்பெற்றது. உதகை மறை மாவட்ட ஆயர் அமுல்ராஜ் தாமஸ் ஆலயத்தில் துவக்கி வைத்த இந்த ஊர்வலம் மத்திய பேரூந்து நிலையம், மணிகூண்டு, கமர்சியல் சாலை நகரின் முக்கிய வழியாக தூய இருதய ஆண்டவர் பேராலயத்தில் வந்தடைந்தது. இந்த ஊர்வலத்தில் ஏராளமான கிறிஸ்துவர்கள் துதி பாடல்களை பாடி வந்தனர். கடுங்குளிர் நிலவிய போதிலும் ஏராளமான மக்கள் சாலையில் இருபுறமிருந்து கிறிஸ்மஸ் தாத்தா ஊர்வலம் வருவதை கண்டு களித்தனர்.

மேலும் படிக்க