• Download mobile app
04 May 2025, SundayEdition - 3371
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கிரானைட் முறைகேடு விசாரணை சகாயம் குழுவை கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

July 19, 2017 தண்டோரா குழு

கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்த ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தின் குழுவை கலைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் முறைகேடாக கிரானைட் வெட்டி எடுக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு நியமிக்கப்பட்டது.இக்குழு விசாரணை நடத்தி முறைகேடு தொடர்பாக முழு அறிக்கையும் தாக்கல் செய்தது.

மேலும்,விசாரணை தொடர்பாக அமைக்கப்பட்ட குழுவுக்கு வழங்கப்பட வேண்டிய ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை, என்று சகாயம் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது சகாயம் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவை வரும் 31 ஆம் தேதிக்குள் கலைக்க வேண்டும் என்றும், இந்த குழுவிற்கு வழங்கப்பட்ட கணினி உள்ளிட்ட உபகரணங்களையும் அரசிடம் திருப்பி அளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க