• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கியூப்களில் ரோபாட் உருவம் வரைந்து 9 வயது பள்ளி மாணவி அசத்தல்

March 25, 2023 தண்டோரா குழு

கோவை துடியலூர் அருகே அர்ச்சனா கார்டன் பகுதியில் வசித்து வருபவர் ஹன்சிதா (வயது 9). இவர் கோவையில் தனியார் பள்ளி ஒன்றில் 4ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை குருமூர்த்தி தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வருகிறார். தாய் சுபாஷினி தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வருகிறார்.

ஹன்சிதாவிற்கு சிறு வயதில் இருந்தே கியூப் விளையாட்டில் ஆர்வம் அதிகம். அதை வைத்து விநாயகர் உருவம், மகாத்மா காந்தி உருவம் போன்றவற்றை வரைந்துள்ளார். இதனிடையே கோவையில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றில் செயற்கை நுண்ணறிவு பிரிவு சார்பாக ஹைபாட் என்னும் ரோபாட் தொடர்பான நிகழ்வு ஒன்று நேற்று நடந்தது. இதில் ஹன்சிதா கலந்து கொண்டு 272 கியூப்களில் ரோபாட் உருவம் வரைந்து அசத்தியுள்ளனர். இதனை கல்லூரி மாணவர்களை, பேராசிரியர்கள் வியப்புடன் பார்த்தனர்.

மேலும் படிக்க