• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் முற்றுகை

April 4, 2018 தண்டோரா குழு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் (சி.பி.ஐ) கட்சியினர் ரயில்நிலையத்தை முற்றுகையிட்டு இன்று (ஏப் 4)ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னாள் வால்பாறை தொகுதி எம்.எல்.ஏ ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இந்த முற்றுகை போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதனிடையே ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு ஏதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதனையடுத்து காவல் துறையினர் அமைத்திருந்த தடுப்புகளை மீறி ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற ஆர்ப்பாட்டகாரர்களுக்கும், காவல் துறையினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க