June 1, 2018 தண்டோரா குழு
காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான அறிவிப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனையில் மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அதன்படி,மத்திய அரசு செயல் திட்டத்தை தாக்கல் செய்தது. எனினும்,மேலாண்மை வாரியம் என பெயர் வைக்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
அந்த கோரிக்கைகயை நிராகரித்த உச்சநீதிமன்றம் மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு திட்டத்தை ஏற்றுக்கொண்டது.அதைபோல்,இதனை உடனே அரசிதழில் வெளியிட வேண்டும்,பருவமழை தொடங்குவதற்குள் மேலாண்மை ஆணையத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
ஆனால்,இன்னும் காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசு அரசிதழில் வெளியிடவில்லை.இதையடுத்து,இதற்கு ஆட்சேபம் தெரிவித்து தமிழக அரசு வழக்கு தொடரலாம் கூறப்பட்டது இந்நிலையில்,காவிரி ஆணையம் அமைக்கும் உத்தரவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கையெழுத்திட்டுள்ளார்.
இதையடுத்து,காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதற்கான ஆணையை அரசிதழில் வெளியிட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இன்று மாலைக்குள் அரசிதழில் வெளியிடப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.