July 10, 2018 தண்டோரா குழு
கர்நாடகாவில் அணைகள் நிரம்புவதால் காவிரியிலிருந்து நீர் திறக்க கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக கபினி,கிருஷ்ணராஜசாகர் உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து முழுக்கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளது.
இதனால் காவிரியிலிருந்து தமிழகத்துக்கு திறந்துவிடப்படும் ஜூலை மாதத்துக்கான நீரை உடனடியாக திறக்க அம்மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கர்நாடக முதல்வர் குமாரசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.இதனால் காவிரியிலிருந்து வெளியேறும் நீரின் அளவு 35,000 கன அடியிலிருந்து 38,000 கன அடியாக உயர வாய்ப்புள்ளது.