• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவல் துறை, பொதுமக்கள் நல்லுறவில் பாலமாக திகழ்ந்த கோவை மாவட்ட எஸ்.எஸ்.ஐ சுந்தர்ராஜன் பணி நிறைவு !

May 31, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவின் உளவுத்துறை சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த சுந்தரராஜன் இன்று ஓய்வு பெற்றார்.

கோவை மாவட்ட காவல்துறையில் 1986ல் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்தவர் சுந்தரராஜன். தாடகம் அருகே உள்ள சோமையனூரை சேர்ந்த இவர் கோவை மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவின் உளவுத்துறை சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 13 வருடங்களாக கோவை மாவட்ட உளவுத்துறையில் பணியாற்றி உயரதிகாரிகளின் நன்மதிப்பை பெற்றும் காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவில் பாலமாக திகழ்ந்தவர்.

இந்நிலையில், தனது 33 ஆண்டுகள் பணியை சிறப்பாக செய்து முடித்து இன்றுடன் பணி நிறைவு செய்தார். இதையடுத்து அவருக்கு துடியலூர் காவல் நிலையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் இன்று சிறப்பாக தனது பணியை நிறைவு செய்த அவருக்கு கோவை போஸ்ட் நிறுவனம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்..

மேலும் படிக்க