May 31, 2019
தண்டோரா குழு
கோவை மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவின் உளவுத்துறை சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்த சுந்தரராஜன் இன்று ஓய்வு பெற்றார்.
கோவை மாவட்ட காவல்துறையில் 1986ல் இரண்டாம் நிலை காவலராக பணிக்கு சேர்ந்தவர் சுந்தரராஜன். தாடகம் அருகே உள்ள சோமையனூரை சேர்ந்த இவர் கோவை மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவின் உளவுத்துறை சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 13 வருடங்களாக கோவை மாவட்ட உளவுத்துறையில் பணியாற்றி உயரதிகாரிகளின் நன்மதிப்பை பெற்றும் காவல்துறை, பொதுமக்கள் நல்லுறவில் பாலமாக திகழ்ந்தவர்.
இந்நிலையில், தனது 33 ஆண்டுகள் பணியை சிறப்பாக செய்து முடித்து இன்றுடன் பணி நிறைவு செய்தார். இதையடுத்து அவருக்கு துடியலூர் காவல் நிலையத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் இன்று சிறப்பாக தனது பணியை நிறைவு செய்த அவருக்கு கோவை போஸ்ட் நிறுவனம் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்..