• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவல்துறையினர் நவீனத்துமான ட்ரோன் கேமரா பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி முகாம்

November 9, 2022 தண்டோரா குழு

போக்குவரத்து கண்காணிப்பு மற்றும் புலனாய்வு துறை ஆய்வு போன்ற வசதிகளில் காவல்துறையினர் நவீனத்துமான ட்ரோன் கேமரா பயன்படுத்துவது தொடர்பான பயிற்சி முகாம் கோவையில் நடைபெற்றது.

தற்போது பல்வேறு துறைகளில் ட்ரோன் கேமரா எனப்படும் ஆளில்லா சிறிய வகை விமானங்கள் பயன்பாடு அதிகரித்து வருகின்றது. இது போன்ற ட்ரோன் கேமராக்களின் பயன்பாடு காவல்துறை வட்டாரங்களிலும் தற்போது பயன்படுத்தபடுகின்றது.

இந்நிலையில் கோவையில் செயல்பட்டு வரும் டி.ஜி.ட்ரோன் கேமரா பயிற்சி மையம் சார்பாக ட்ரோன் கேமராவை கையாள்வது குறித்து காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.இரண்டு நாட்கள் நடைபெற உள்ள பயிற்சி முகாமை கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

இது குறித்து டி.ஜி.ட்ரோன் கேமரா பயிற்சி மையத்தின் நிர்வாக இயக்குனர் ப்ரவீன் ராஜ சேகர் கூறுகையில்,

ட்ரோன் கேமராவில் உள்ள அப்ளிகேஷன்கள் மற்றும் புதிய வகையிலான நவீன ட்ரோன்களை கையாளும் விதம் குறித்து காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும்,இதனால் காவல் துறையினரின் சில இடங்களில் செல்ல முடியாத இடங்களுக்கும் இந்த தொழில் நுட்பம் வாயிலாக செயல்பட முடியும் என தெரிவித்தார்.முன்னதாக நடைபெற்ற பயிற்சி முகாம் துவக்க விழாவில் டி.ஜி.ட்ரோன் கேமரா பயிற்சி மையத்தின் விற்பனை மேலாளர் பிரபு,இயக்குனர் பழனிசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க