• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவல்துறையினர் கட்டுப்பாட்டில் அலங்காநல்லூர்

January 23, 2017 தண்டோரா குழு

அலங்காநல்லூரில் போராட்டம் நடத்திய பகுதியைக் காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அலங்காநல்லூரில் மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், கிராம மக்கள் என தொடர்ந்து 8-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். “ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என அவர்கள் தெரிவித்தனர்.

இதனை அடுத்து போராட்டக்காரர்களிடம் காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் எந்தப் பலனும் ஏற்படவில்லை. இதனால் போராட்டக்காரர்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த காவல் துறையினர் முயற்சி மேற்கொண்டனர். கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்கள், குழந்தைகளைக் காவல் துறையினர் பெண் காவலர்களைக் கொண்டு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.

அதன் பின் காவல்துறையினர் மாணவர்கள், இளைஞர்களை குண்டுகட்டாகத் தூக்கி அப்புறப்படுத்தினர். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பின் அலங்காநல்லூரில் போராட்டம் நடத்திய பகுதியை காவல் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும் படிக்க