• Download mobile app
20 Apr 2026, MondayEdition - 3722
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காவல்துறையினரைக் கட்டித்தழுவிப் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்

January 23, 2017 தண்டோரா குழு

ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு ஆதரவாக பெரம்பலூர் மாவட்டத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் இறுதியாக காவல் துறையினரைக் கட்டித்தழுவி தங்கள் போராட்டத்தை முடித்துக் கொண்டனர்.

ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்த வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன் கடந்த 7 நாட்களாக மாணவர்கள், மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் கொண்டு வந்ததை அடுத்து போராட்டத்தைக் கைவிடுமாறு காவல்துறையினர் போராட்டக்காரர்களிடம் கேட்டுக் கொண்டனர். இது தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து மாணவர்கள் காவல் துறையினருக்கு ஒத்துழைப்பு கொடுத்து போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மாணவர்களுக்கு இத்தனை நாட்களாகக் காவல்துறையினர் ஒத்துழைப்பு அளித்து வந்ததால் அவர்களைக் கட்டித்தழுவி, நன்றி கூறி மாணவர்கள் கலைந்து சென்றனர்.

மேலும் படிக்க