• Download mobile app
08 Nov 2025, SaturdayEdition - 3559
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காலையில் வாட்டி வதைத்த வெயில் மாலையில் மழை – கோவை மக்கள் மகிழ்ச்சி !

May 28, 2020 தண்டோரா குழு

கோவையில் கலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலையில் காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் அக்கினி வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் கோவை மாவட்டத்தில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது. இந்தநிலையில் இன்று காலை முதலே சுட்டரித்த வெயில் மாலையில் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.தொடர்ந்து தற்போது, கோவையில் இடி மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

மாநகரப் பகுதிகளில் காந்திபுரம் சிங்காநல்லூர் ஒண்டிப்புதூர் சாய்பாபா காலனி,பீளமேடு, துடியலூர் மற்றும் உக்கடம் போன்ற சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது. வானிலை தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு கரையோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் கோவையில் தற்போது இந்த மழை பெய்து வருவது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் பலத்த மழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர்.

மேலும் படிக்க