June 5, 2018 தண்டோரா குழு
காலா படத்தை திரையிட அரசை வற்புறுத்த முடியாது என கர்நாடக உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
கபாலி படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஞ்சித் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் காலா.
காவிரி விவகாரத்தில் தமிழருக்கு ஆதரவாக ரஜினி குரல் கொடுத்ததால் காலா படம் திரையிடப்படும் இடங்களில் பிரச்சனை வர வாய்ப்பிருப்பதால் கர்நாடகத்தில் படத்திற்கு தடை விதித்துள்ளனர்.
இதற்கிடையில்,படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் காலா படத்தை வெளியிட கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார்.இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது,காலா படத்தை திரையிட அரசை வற்புறுத்த முடியாது.ஒரு படத்தை வெளியிட கோரி அரசை நீதிமன்றம் நிர்பந்திக்க முடியாது.படக்குழுதான் அரசை அணுகி தங்கள் கோரிக்கையை வைக்க வேண்டும்.
காலா பிரச்சனை குறித்து கர்நாடக அரசிடம் படக்குழு முறையிடலாம்.அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மீண்டும் நீதிமன்றத்தை நாடலாம் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் கர்நாடகாவில் படம் வெளியானால்??? படத்திற்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.