April 27, 2019
தண்டோரா குழு
1180 கி.மீ, தொலைவில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலை ஃபானி புயலாக உருவாகும் என்ற நிலையில், புயலாக உருவானது.
ஃபானி புயல் குறித்து இன்று பிற்பகல் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன்,
தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மாலை ஃபானி புயலாக உருவாகும். 1180 கி.மீ, தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது. நாளை காலை அதிதீவிர புயலாக பானி புயல் மாறும் என்றும் வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவித்தார். 29,30,31 ஆகிய தேதிகளில் மீனவர்கள் தென்மேற்கு வங்கக்கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனக் கூறியிருந்தார்.
இது தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிப்பில்;
இந்திய பெருங்கடலை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மதியம் ஃபானி புயலாக மாறியது இந்த புயலானது இலங்கை கடல் பகுதியில் வடமேற்காக நகரக் கூடும். ஏப்.,30 ம் தேதி மாலை வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை ஃபானி புயல் நெருங்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலமானது சென்னைக்கு தென்கிழக்கே 1850 கி.மீ.,ல் நிலை கொண்டுள்ளது. மணிக்கு 20 கி.மீ., வேகத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. ஏப்.,30 மற்றும் மே 1 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் வடக்கு கடலோர பகுதிகளில் பரவலமாக கனமழை பெய்யக் கூடும். ஏப்.,29 மற்றும் 30 ஆகிய நாட்களில் கேரளாவில் கனமழை பெய்யும். ஏப்.,30 ஆந்திர தெற்கு கடலோர பகுதிகளிலும், மே 1 ம் தேதி ஆந்திர கடலோர பகுதிகளிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இந்நிலையில், வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஃபானி புயலாக உருவாகியுள்ளது.