தேடப்படும் நபராக அறிவித்த கார்த்தி சிதம்பரத்துக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு முறைகேடாக அந்நிய முதலீடு பெற்றது தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்குகளில் நேரில் ஆஜராக கார்த்திக் சிதம்பரத்திற்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார். இதனால், கார்த்தி சிதம்பரத்தை தேடப்படும் நபராக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்து லுக்-அவுட் நோட்டீஸ் அனுப்பியது.
இதனை ரத்து செய்யக்கோரி கார்த்திக் சிதம்பரம் சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில், இம்மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், லுக் அவுட் சுற்றறிக்கைக்கு செப்டம்பர் 4ம் தேதி வரை இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், இது குறித்து பதில் அளிக்கும்படி உள்துறை அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்