• Download mobile app
08 May 2024, WednesdayEdition - 3010
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காரமடை அருள்மிகு ஸ்ரீஅரங்கநாத சுவாமி திருக்கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

January 13, 2022 தண்டோரா குழு

காரமடை அருள்மிகு ஸ்ரீஅரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு.அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து அரங்கனின் அருளாசி பெற்றுச்சென்றனர்.

கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்து பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ அரங்கநாத சுவாமி திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

ஆனால்,தற்போது கொரோனா பரவல் காரணமாக நடப்பாண்டில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. மேலும்,இரு டோஸ் தடுப்பூசி சான்று,முகக்கவசம் உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்றி சொர்க்கவாசல் திறப்பிற்கு பின்னர் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 10 நாட்களுக்கு முன்பு பகல்பத்து உற்சவத்துடன் துவங்கியது.இதனைத் தொடர்ந்து அரங்கநாதனுக்கு தினசரி பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று அரங்கநாத பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து அருள்பாலித்து வந்தார்.

இதனை தொடர்ந்து முக்கிய நிகழ்வான சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.இதற்காக அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு அரங்கநாதருக்கு திருமஞ்சனம் உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட ஷேச வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவியுடன் சமேதராய் அரங்கநாதர் பரமபத வாசல் முன்பு எழுந்தருளிய நிலையில் அதிகாலை சரியாக 5.45 மணியளவில்
சொர்க்கவாசல் திறக்கப்பட்டு நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார்ராமானுஜர், ஆழ்வார்களுக்கு முதலில் அரங்கநாதர் காட்சி அளித்தார்.

இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து முன்மண்டபம் வந்தடைந்தார்.பின்னர், கோவில் காலை 6 மணி பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.இதற்காக அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள் காரை அரங்கனை தரிசித்து அருளாசி பெற்றுச்சென்றனர்.

மேலும் படிக்க