• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காரமடை அருகே சூறாவளி காற்றுடன் பெய்த மழையில் 10,000 வாழை மரங்கள் சேதம்!

May 17, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையில் பத்தாயிரம் வாழை மரங்கள் சேதமடைந்தன.

கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.காரமடை அருகே உள்ள திம்மம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி.இவர் ஒன்றரை ஏக்கரில் சுமார் 1500 வாழைகள் பயிரிட்டிருந்தார். இந்நிலையில் நேற்று பெய்த மழையில் வாழைகள் சேதமடைந்தன.

மேலும், அதே பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரின் தோட்டத்தில் இரண்டரை ஏக்கரில் பயிரிட்டு இருந்த கதலி 2500 வாழை மரங்களும்,
சுப்பையன் என்பவரது தோட்டத்தில் ஒரு ஏக்கரில் பயிரிட்டு இருந்த 1,200 வாழைகளும் சேதம் ஆகியுள்ளது.அதேபோல் புங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவர் தோட்டத்தில் பயிரிட்டு இருந்த
வாழை மரங்களும் சேதமானது.

நேற்று பெய்த கனமழையால் பல லட்சம் ரூபாய் செலவு செய்து பயிரிட்டு இருந்த வாழைகள் ஒரேநாளில் சேதமானது.இதனால் விவசாயிகள் கவலை யடைந்துள்ளனர்.

மேலும் படிக்க