January 8, 2021
தண்டோரா குழு
காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பெண்ணிடம் மர்ம நபர்கள் செயின் பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் வீடு வாடகைக்கு கேட்பது போல் பெண்ணிடம் நகை பறிப்பு,வீடு புகுந்து 6 சவரன் நகை திருட்டு,நகைக்கடையில் நகை வாங்குவது போல் நகையை பிடுங்கி சென்றது உள்ளிட்ட 3 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரி,மிலிதன் கிராமத்தை சேர்ந்தவர் முத்தன்.இவரது மனைவி விஜயலட்சுமி.இவர்கள் காரமடை காந்தி நகரில் வசித்து வருகின்றனர். நேற்று விஜயலட்சுமி தனது வீட்டுக்கு செல்லும் வழியில் தலையில் ஹெல்மெட் அணிந்த ஒருவர், ஹெல்மெட் இல்லாமல் மற்றொருவர் என இருவர் கும்பல் பட்டப்பகலில் பெண்ணிடம் கழுத்தில் அணிந்திருந்த 2 1/2 சவரன் தங்கச்சங்கிலியை பறித்துச்சென்ற சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில் இச்சம்பவங்கள் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காரமடை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து காரமடை காவல் துறையினர் கூறுகையில்,
இக்குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் வெவ்வேறு கும்பலை சேர்ந்தவர்கள் என்றும்,அக்கும்பலை சேர்ந்தவர்கள் குறித்த தகவல்கள் தற்போது கிடைத்துள்ளதாகவும், இன்னும் இரு தினங்களில் குற்றவாளிகள் சிக்குவர் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
காரமடை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் நடைபெற்று வரும் நகை பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.