• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காந்திபுரம் 4வது வீதி முதல் 10வது வீதி வரை கார் பைக் செல்ல தடை

July 21, 2020 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் 4 வீதியிலிருந்து 10 வீதி வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட செல்போன் உதிரி பாகங்கள், செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்த்தல் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேலும் கிராஸ் கட் சாலையில் துணி மற்றும் நகைக்கடைகள், இரண்டு நான்கு சக்கர உதிரிபாக கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் அதிகம் செயல்பட்டு வருகின்றன. இந்த பகுதியில் கொரொனா தொற்று ஏற்பட்டதையடுத்து 2 மற்றும் 3 ஆவது வீதி மூடப்பட்டது.

இந்நிலையில் காந்திபுரம் கிராஸ் கட் மற்றும் நூறடி சாலை என இரண்டு புறமும் 4 ஆவது விதியிலிருந்து 10 ஆவது விதி வரை யாரும் வாகனத்தில் செல்ல முடியாதபடி சாலைகள் மறைக்கப்பட்டுள்ளன. மேலும் அப்பகுதியில் செயல்படும் செல்போன் உதிரி பாகங்கள், விற்பனை கடைகள் வரும் சனிக்கிழமை வரை மூடப்படுவதாக அச்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.இப்பகுதியில் ஒரு சிலருக்கு தொற்று ஏற்பட்டதையடுத்து சாலைகள் மூடப்பட்டுள்ளதால், கடைகளுக்கு வருபவர்கள் நூறடி சாலை மற்றும் கிராஸ்கட் சாலையில் வாகனங்களை நிறுத்தி நடந்து சென்று வருகின்றனர். இதனால் பரபரப்பாக காணப்படும் கிராஸ் கட் சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் படிக்க