• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காட்டு யானை தாக்கி மன நலம் பாதிக்கப்பட்டவர் பலி – வனத்துறையினர் விசாரணை !

August 2, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கோத்தகிரி செல்லும் சாலையில் செல்லும் சாலையில் 3 ஆம் வளைவு அருகே இன்று காலை 45 வயது மதிக்கத்தக்க நபரின் சடலம் சிதைந்த நிலையில் கிடப்பதாக சிறுமுகை வனத்துறையினருக்கு தகவல் தெரிய வந்துள்ளது. சம்பவம் குறித்து அறிந்த வனத்துறையினர வி்ரைந்து வந்து சடலத்தை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

வனத்துறையினரின் விசாரணையில் காட்டு யானையால் தாக்கப்பட்டு சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபரின் உடல் சிதைந்த நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.மேலும்,இறந்த நபர் மனநிலை சரியில்லாதவர் என்பதும், தனியாக இரவு நேரத்தில் சாலையில் நடந்து வரும் போது சம்பவம் நடந்துள்ளது என்பதும் வனத்துறையினரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.இச்சம்பவம் குறித்து சிறுமுகை வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும்,இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க