• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காட்டிக்கொடுத்து விடுவார் என அச்சத்தில் தான் விஜயபாஸ்கருக்கு பதவி வழங்கப்பட்டுள்ளது – துரைமுருகன்

September 15, 2018 தண்டோரா குழு

பதவி கொடுக்கவில்லை என்றால் யார் யாரை காட்டிக்கொடுப்பார் என்ற பயம் தான் என அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதிமுக அமைப்பு செயலாளர் பதவி வழங்கபட்டுள்ளது என திமுக பொருளாளர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய அரசுக்கு ஆளுநர் கடிதம் அனுப்பவில்லை என சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளதை குறிப்பிட்டவர், இலங்கை இறுதிப்போரில் இந்தியா உதவியதாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ராஜபக்ச பேட்டி குறித்து தெரியாது என்றார். மின் தடையே இருக்காது என ஒரு அமைச்சர் சொல்வதாகவும், மற்றொரு அமைச்சர் நிலக்கரி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பவதாகவும் கூறினார்.

மேலும், முதலில், அமைச்சர்கள் உட்கார்ந்து நாட்டின் நிலைமையை பேசி, அதன் பிறகு மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். பதவி கொடுக்கவில்லை என்றால் யார் யாரை காட்டிக்கொடுப்பார் என்ற பயம் தான் என அமைச்சர் விஜயபாஸ்கருக்கு அதிமுக அமைப்பு செயலாளர் பதவி வழங்கபட்டுள்ளது என துரைமுருகன் விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க