June 1, 2018 தண்டோரா குழு
கர்நாடகாவில் இலாகா பங்கீட்டில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சிகளுக்கு இடையே நிலவி வந்த இழுபறி முடிவுக்கு வந்தது.கர்நாடக அமைச்சரவை விரிவாக்கப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் நடந்த சட்டபேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.முதலமைச்சராக குமாரசாமியும்,துணை முதலமைச்சராக பரமேஷ்வர ராவும் கடந்த வாரம் பதவியேற்றனர்.எனினும்,காங்கிரஸ்,மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியிடையே இலாக்கா ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நீடித்ததால் அமைச்சரவை விரிவாக்கத்தில் இழுபறி நீடித்து வந்தது. இதனைத்தீர்க்கும் விதமாக இன்று இரு கட்சிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டது.
இதன்படி காங்கிரசுக்கு,உள்துறை,நீர்பாசனம்,சுகாதாரம்,பெங்களூரு நகர வளர்ச்சி,வருவாய்த்துறை ஊரக நகர்ப்புற வளர்ச்சி,வீட்டுவசதி,விவசாயம் மற்றும் பெண்கள்மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட 22 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பபட்டுள்ளது.அதைபோல்,மதசார்பற்ற ஜனதா தளத்தின் வசம் நிதி,பொதுப்பணி,மின்சாரம்,கூட்டுறவு,கல்வி,சுற்றுலா,போக்குவரத்து துறை உள்ளிட்ட 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்படுவது என முடிவு செய்யப்பட்டது.இதனையடுத்து வரும் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடக்கிறது.
மேலும்,கூட்டணி அரசில் பிரச்னைகளை தீர்க்க கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்கவும்,இதன் தலைவராக முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் ஒருங்கிணைப்பாளராக மஜத கட்சியின் டானீஸ் அலி செயல்படுவார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.