• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

காங்கிரஸிற்கு 22 மஜதவுக்கு 12 முடிவுக்கு வந்த இலாகா இழுபறி

June 1, 2018 தண்டோரா குழு

கர்நாடகாவில் இலாகா பங்கீட்டில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கட்சிகளுக்கு இடையே நிலவி வந்த இழுபறி முடிவுக்கு வந்தது.கர்நாடக அமைச்சரவை விரிவாக்கப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் நடந்த சட்டபேரவை தேர்தலில் வெற்றி பெற்று காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.முதலமைச்சராக குமாரசாமியும்,துணை முதலமைச்சராக பரமேஷ்வர ராவும் கடந்த வாரம் பதவியேற்றனர்.எனினும்,காங்கிரஸ்,மதச்சார்ப்பற்ற ஜனதா தளம் கட்சியிடையே இலாக்கா ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நீடித்ததால் அமைச்சரவை விரிவாக்கத்தில் இழுபறி நீடித்து வந்தது. இதனைத்தீர்க்கும் விதமாக இன்று இரு கட்சிகளுக்கு இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டது.

இதன்படி காங்கிரசுக்கு,உள்துறை,நீர்பாசனம்,சுகாதாரம்,பெங்களூரு நகர வளர்ச்சி,வருவாய்த்துறை ஊரக நகர்ப்புற வளர்ச்சி,வீட்டுவசதி,விவசாயம் மற்றும் பெண்கள்மற்றும் குழந்தைகள் நலம் உள்ளிட்ட 22 துறைகள் ஒதுக்கீடு செய்யப்பபட்டுள்ளது.அதைபோல்,மதசார்பற்ற ஜனதா தளத்தின் வசம் நிதி,பொதுப்பணி,மின்சாரம்,கூட்டுறவு,கல்வி,சுற்றுலா,போக்குவரத்து துறை உள்ளிட்ட 12 துறைகள் ஒதுக்கீடு செய்யப்படுவது என முடிவு செய்யப்பட்டது.இதனையடுத்து வரும் புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்கு புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா நடக்கிறது.

மேலும்,கூட்டணி அரசில் பிரச்னைகளை தீர்க்க கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்கவும்,இதன் தலைவராக முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் ஒருங்கிணைப்பாளராக மஜத கட்சியின் டானீஸ் அலி செயல்படுவார்கள் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க