• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கவுன்சிலரின் மனு மீது உடனடி நடவடிக்கை எடுத்த போக்குவரத்து துணை கமிஷனர்

December 16, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணனிடம் மனு ஒன்று அளித்துள்ளார். அதில், பீளமேடு ரயில்வே மேம்பாலம் அருகே உள்ள காந்திமாநகர், வி.கே.ரோடு, கருப்பண்ண கவுண்டர் லேஅவுட், ஹட்கோ காலனி, விளாங்குறிச்சி சாலை ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

இப்பகுதி மக்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து நெரிசலால் மேம்பாலத்தை கடந்து செல்ல கடும் சீரமம் அடைந்து வருகின்றனர்.இதுதவிர ஹட்கோ காலனி, வி.கே. ரோடு ஆகிய பகுதிகளில் சாலையின் இருபுறமும் 24 மணி நேரமும் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதன் காரணமாகவும் இப்பகுதி மக்கள் சாலையில் நடந்து செல்லவே முடியாத நிலை உள்ளது.

மேம்பாலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய காலை மற்றும் மாலை வேலைகளில் போக்குவரத்து போலீசார் பணி அமர்த்தப்பட வேண்டும். சாலையை அக்கிரமித்து நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் அப்புறப்படுத்த வேண்டும் எனக்கூறப்பட்டிருந்தது.இதனை பெற்றுக்கொண்ட போக்குவரத்து துணை கமிஷனர் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு போக்குவரத்து போலீசாரை அப்பகுதியில் பணிக்கு அமர்த்தியுள்ளார்.இதனால் போக்குவரத்து நெரிசல் குறைந்து அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க