• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கல்வி நிறுவனங்களின் மூலம் கல்வி உதவித் தொகை திட்டங்களில் விண்ணப்பிக்க அழைப்பு

January 28, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளதாவது:

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம் (3-8ம் வகுப்பு), ப்ரீமெட்ரிக் திட்டம் (9 மற்றும் 10ம் வகுப்பு) போஸ்ட் மெட்ரிக் திட்டம் (11ம் வகுப்பு முதல் கல்லூரி வரை), உயர்கல்வி சிறப்பு உதவித் தொகைத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நடப்பு கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகை திட்டங்களை செயல்படுத்தும் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் கல்வி உதவித் தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்பு ஏ.ஐ.எஸ்.ஹச்.இ. (AISHE) மற்றும் யு.டி.ஐ.எஸ்.இ. (UDISE) சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும். மேலும், அது பயன்பாட்டில் உள்ளதா? என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.

கல்லூரிகளில் நடத்தப்படும் பாடப்பிரிவுகளுக்கு என்.பி.ஏ. (NBA) மற்றும் என்.ஏ.ஏ.சி. இவற்றால் வழங்கப்பட்ட தரச்சான்றுக்கான ஆவணங்கள் பெற வேண்டும். மாணாக்கர்கள் கல்வி நிறுவனங்களின் கல்வி உதவித் தொகை மைய உதவி மூலம் தங்கள் விவரங்களை நேரடியாக இணையதளத்தில் தவறின்றி பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவியராக இருக்க வேண்டும். மாணவியர்களுக்கு பெற்றோர் ஆண்டு வருமானம் உச்சவரம்பு இல்லை.

ப்ரீமெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை பெற மாணவர்களின் சாதிச்சான்று, வருமானச்சான்று, ஆதார், முந்தைய ஆண்டின் வருகைச் சான்று மற்றும் வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கநகல்கள் இணைத்து சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

மாணவர்களின் பெயர், கல்வி சான்றிதழ்களில் உள்ளவாறு ஆதார் மற்றும் வங்கிக் கணக்கில் இடம் பெற்றிருக்க வேண்டும். மேலும், மாணவர், பெற்றோரின் கைபேசி எண்கள் செயல்பாட்டில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும். கல்வி உதவித் தொகை விண்ணப்பிக்கும் மாணவர்கள் தேர்வு எழுதத் தேவையான குறைந்தபட்ச 75 சதவீதம் வருகை சான்று பெற்றிருக்க வேண்டும்.

உயர்கல்வி சிறப்பு உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் பயனடைய அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளின் விடுதிகளில் மாணவர்கள் தங்கி கல்வி பயில வேண்டும். அரசு அனுமதி பெற்ற தனியார் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களாக இருப்பின் சம்மந்தப்பட்ட கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் விண்ணப்பிக்க வேண்டும். பெற்றோர் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் நடப்பு கல்வியாண்டில் தாம் பயிலும் கல்வி நிறுவனங்களின் மூலம் தங்களது சரியான விவரங்கள் மற்றும் சான்றுகளுடன் கல்வி உதவித் தொகை திட்டங்களில் விண்ணப்பித்து பயனடையலாம்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க