• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கல்வி கற்ப்பித்தல் மாறி ,கோச்சிங் செண்டராகி வருகிறது- சூர்யா ஆதங்கம்

July 13, 2019 தண்டோரா குழு

கல்வி கற்ப்பித்தல் மாறி , கோச்சிங் செண்டராகி வருகிறது என நடிகர் சூர்யா ஆதங்கமாக பேசியுள்ளார்.
\
ஸ்ரீசிவக்குமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் பவுண்டேசன் சார்பில், பனிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 20 மாணவ மாணவிகளுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் பரிசளிக்கும் விழா சென்னை வடபழனியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நடிகர்கள் சிவக்குமார், சூர்யா, கார்த்தி மற்றும் கல்வியாளர் வசந்திதேவி பேராசிரியர் மாடசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய நடிகர் சூர்யா,

“புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து பெரும்பாலான மாணவர்கள், பெற்றோர்களுக்கு தெரியவில்லை. பெரும்பாலானோர் புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து பேசாதது வருத்தமளிக்கிறது. 30 கோடி மாணவர்களின் எதிர்காலம் தொடர்புடையது புதிய கல்விக்கொள்கை. புதிய கல்விக் கொள்கையில் ஆசிரியர்கள், பெற்றோர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஓராசிரியர் பள்ளிகள் மூடப்படும் என்று கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைத்து இருப்பது சரியல்ல. அப்படி பள்ளியை மூடினால் மாணவர்கள் எங்கே செல்வார்கள். அனைவருக்கும் சமமான கல்வியை வழங்காமல் நுழைத்தேர்வு நடத்துவது ஏன்?

அனைவரும் அமைதியாக இருந்தால் புதிய கல்விக்கொள்கை வரைவு நம்மீது திணிக்கப்படும். கல்வி முறையில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் உணர வேண்டும். நாம் அனைவரும் விழித்துக்கொள்ள வேண்டும். புதிய கல்விக்கொள்கை வரைவு குறித்து அனைவரும் தங்களது கருத்தினை தெரிவிக்க வேண்டும். ஆரம்பக் கல்வியிலேயே மூன்று மொழிகளை திணிக்க கூடாது. 5-ம் வகுப்பில் பொதுத்தேர்வு நடத்தினால் இடைநிற்றல் அதிகரிக்கும்.6.5 கோடி மாணவர்கள் பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்தி விடுகின்றனர். 60% மாணவர்கள் அரசு பள்ளிகளில் தான் படிக்கிறார்கள், புதிய கல்விக்கொள்கை குறித்து விரிவாக விவாதிக்க வேண்டியது அவசியம், அரசு பள்ளிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை, 10 ஆண்டுகளாக ஆசிரியர்களே இல்லாமல் படிக்கும் 30% மாணவர்கள் எப்படி நீட் தேர்வு எழுதுவார்கள்? ஒரு ஆசிரியர், 10 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூடினால் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர்

நீட் மற்றும் தகுதித் தேர்வுகள் மூலமாக அரசு பள்ளி மாணவர்கள் வாய்ப்புகளை தட்டிப்பபறிகிறது. கல்வி கற்ப்பித்தல் மாறி , கோச்சிங் செண்டராகி வருகிறது. நீட் தேர்வால் பயிற்சி மையங்கள் தான் அதிகரிக்கும். நீட் தேர்வு பயிற்சி மையங்களின் தற்போதைய ஆண்டு வருமானம் ரூ.5000 கோடி. எதிர்காலத்தில் தேர்வு பயிற்சி மையங்கள் காளான்கள் போல முளைக்கும். படிப்பதற்கு உரிய வசதிகள் செய்து தராமல் தேர்வுகள் வைப்பது மட்டும் எப்படி நியாயம்? புதிய கல்விக்கொள்கை வரைவில் சில நல்ல அம்சங்கள் இருந்தாலும் அச்சம் தரக்கூடிய அம்சங்கள் பல இருக்கின்றன” என்று கூறியுள்ளார் . கலை அறிவியல் கல்லூரியில் சேரவும் புதிய கல்விக்கொள்கையில் நுழைவுத் தேர்வு உள்ளது. எதற்கெடுத்தாலும் நுழைவுத் தேர்வு நடத்தினால் மாணவர்கள் எப்படி படிப்பது என்று கேள்வி எழுப்பினார்.

மேலும் படிக்க