• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

June 21, 2022 தண்டோரா குழு

தமிழக அரசின் சார்பாக ஆண்டுதோறும் சுதந்திர தின விழா அன்று தமிழக முதலமைச்சரால் கல்பனா சாவ்லா விருது வழங்கப்படுகிறது.

இயற்கை இன்னல்கள், விபத்துகள், தீ விபத்து, திருட்டு சம்பவங்கள், நீரில் மூழ்கும் நிகழ்வுகள் போன்ற எதிர்பாராத நிகழ்வுகளின் போது வீரத்துடன் துணிவு மற்றும் தைரியமாகவும், சாதுர்யமாகவும் செயல்பட்டு உயிரை காப்பாற்றிய ஆற்றல்மிக்க தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

2022 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது பெற தகுதியான பெண்கள் இணையதளத்தின் மூலம் வரும் 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் சமீரன் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க