• Download mobile app
02 Jun 2026, TuesdayEdition - 3765
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கற்றுத்தந்த ஆசிரியர்களை தேடிப்பிடித்து கௌரவித்த முன்னாள் மாணவர்கள்!

June 27, 2022 தண்டோரா குழு

கோவை பிபிஜி கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 24ஆண்டுகள் கழித்து தங்களது ஆசிரியர்களை கவுரவித்து நெகிழ்ச்சியூட்டினர்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள பிபிஜி பிசியோதெரபி கல்லூரியில் யுக்தா 2022 எனும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 1998ஆம் ஆண்டில் படித்த மாணவர்கள் முதல் தற்போது வரை உள்ள மாணவர்கள் வரை என 400க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

பிபிஜி குழுமம் தலைவர் தங்கவேலு, தாளாளர் சாந்தி தங்கவேலு, அறங்காவலர் அக்ஷ்ய், கல்லூரி முதல்வர் சிவக்குமார் ஆகியோருக்கு மாலை அணிவித்து முன்னாள் மாணவர்கள் கவுரவித்தனர்.இதே கல்லூரியில் பயின்று தற்போது பிசியோதெரபி துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் முன்னாள் மாணவர்களான ஜெய்சன்,ரஹ்மான்,தாஷ்பிரகாஷ்,மணிமுத்து,அம்பிகா, தெய்வேந்திரன், ஆகியோர் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் 2002 ஆம் ஆண்டு பயின்ற மாணவர்கள் கல்லூரியின் சிஏஓ தக்ஷணாமூர்த்திக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.நிகழ்ச்சிக்கு முன்பாக முன்னாள் மாணவர்களுக்கான கபடி, கைப்பந்து, கிரிக்கெட் ஓட்டப்பந்தையம் என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க