• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடக பேருந்து விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் – கர்நாடக முதல்வர்

November 24, 2018 தண்டோரா குழு

கர்நாடகாவில் கால்வாயில் விழுந்து விபத்திற்குள்ளன தனியார் பேருந்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 நிதியுதவி வழங்கப்படும் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார்.

கர்நாடகா மாநிலம் மண்டியா மாவட்டம் பகுதியில் உள்ள கால்வாய் மீது உள்ள பாலத்தில் இன்று காலை தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக சென்றுள்ளது. பேருந்தை ஓட்டுனர் நிறுத்த முயற்சித்தும் அது முடியவில்லை.இதை தொடர்ந்து பாலத்திலிருந்து பேருந்து ஆற்றுக்குள் நிலைதடுமாறி விழுந்தது. இதில் பேருந்து முழுவதுமாக நீரில் மூழ்கியது. பயணிகள் வெளியேற முடியாமல் தத்தளித்து வருகின்றனர். இதனால் பேருந்தில் பயணம் செய்த குழந்தைகள் உள்ளிட்ட 25 பேர் உயிரழந்தனர். மேலும் காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலரின் நிலை கவலைக்கிடமாக இருந்தது இதனால் பலி எண்ணிகை உயரும் என அஞ்சப்படுகிறது, சம்பவ இடத்தில் அரசு அதிகாரிகள், மீட்பு குழுவினர், மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்,

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த முலமைச்சர் குமாரசாமி, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார் பின்னர் அப்பகுதியை பார்வையிட்ட அதிகாரிகளிடம் விபத்து குறித்து விசாரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார், பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும், மேலும் விபத்து குறித்து காவல் துறை விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும் படிக்க