• Download mobile app
08 Jun 2025, SundayEdition - 3406
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடகா மாநில முதல்வராக எடியூரப்பா பதவியேற்பு !

July 26, 2019 தண்டோரா குழு

கர்நாடகா மாநிலத்தின் முதலமைச்சராக எடியூரப்பா 4வது முறையாக பதவியேற்றார்.

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. அரசின் மீது அதிருப்தியிலிருந்த 16 எம்.எல்.ஏ-க்கள், சமீபத்தில் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அங்கு அரசியல் குழப்ப நிலை நீடித்து வந்தது. இந்த சூழலில் சுயேச்சை எம்.எம்.ஏ.க்கள் 2 பேர் அரசுக்கு அளித்து வந்த ஆதரவிலிருந்து விலகிக்கொள்வதாக தெரிவித்தனர்.

இதையடுத்து, கடந்த சில நாள்களாக சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடத்தப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின், சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், குமாரசாமி அரசு கவிழ்ந்தது. தோல்வியை தொடர்ந்து குமாரசாமி ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கினார். இந்நிலையில் இன்று கர்நாடகாவில் ஆட்சி அமைக்க ஆளுநர் வஜுபாய்வாலாவை சந்தித்து எடியூரப்பா உரிமை கோரினார். இதனை தொடர்ந்து கர்நாடகவில் ஆட்சியமைக்க ஆளுநர் எடியூரப்பாவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்கிடையில் எடியூரப்பா ஒரு வாரத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்கும்படி கவர்னர் வஜுபாய் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கர்நாடக மாநில முதல்வராக முதல்வராக எடியூரப்பா கடவுளின் மீது சத்தியம் செய்து பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். எடியூரப்பா முதல்வராக பதவி ஏற்பது இது 4வது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க