May 7, 2018 தண்டோரா குழு
கர்நாடகாவில் சைக்களில் சென்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்கு சேகரித்தார்.
கர்நாடகாவில் மே 13 தேர்தல் நடைப்பெறுகிறது.இந்நிலையில் வாக்கு சேகரிக்க அனைத்து கட்சியினரும் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவில் கோலார் பகுதியில் சைக்கிளில் சென்று வாக்குகளை சேகரித்தார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடியின் ஆட்சியின் கீழ் என்ன நடக்கிறது? என கேள்வியை எழுப்பினார்.மேலும்,நம்முடைய மொபைல் போனில்,ஒர்க் மோடு,ஸ்பிக் மோடு,ஏர்ப்ளேன் மோடு என பல உள்ளது,ஆனால் மோடிஜி பயன்படுத்துவது எல்லாம் ஸ்பிக் மோடு,ஏர்ப்ளேன் மோடு மட்டுமே,ஒர்க் மோடை பயன்படுத்துவது கிடையாது என்றார்.