• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கர்நாடகாவில் கார் விபத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ மரணம்

May 28, 2018 தண்டோரா குழு

கர்நாடகாவில் துளசிகெரி பகுதியில் நிகழ்ந்த கார் விபத்தில் காங்கிரஸ் எம்எல்ஏ சித்துநைமா கவுடா உயிரிழந்தார்.

கர்நாடகாவில் பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு மத்தியில் காங்கிரஸ் – மஜத கூட்டணி ஆட்சி அமைத்து வருகிறது. மஜத தலைவர் குமாரசாமி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

இத்தேர்தலில் ஜம்காந்தி ( Jamkhandi) தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு பாஜக வேட்பாளரான குல்கர்னி ஸ்ரீகாந்தைவிட 2975 அதிகம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றவர் சித்துநைமா கவுடா. இந்நிலையில் இவர் கோவாவில் இருந்து பாகல்கோட்டிற்கு தனது காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது துளசிகெரி என்னும் பகுதியில் இவரது கார் விபத்தில் சிக்கியது.ல்இதில் எம்எல்ஏ சித்துநைமா கவுடா பரிதாபமாக உயிரிழந்தார்.

இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. தற்போது சித்துநைமா கவுடா மரணத்தையடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க