• Download mobile app
30 Apr 2025, WednesdayEdition - 3367
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கரை ஒதுங்கிய திமிகலம் மீண்டும் கடலுக்குள் அனுப்பப்பட்டது

August 28, 2017 தண்டோரா குழு

பிரேசில் பிஸியோ கடற்கரையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தை அங்கிருந்த மக்கள் மீண்டும் கடலுக்குள் அனுப்பினர்.

பிரேசில் தலைநகரிலிருந்து சுமார் 2௦௦ கிலோமீட்டர் தூரத்திலுள்ள பிஸியோ கடற்கரையில், சுமார் 32 அடி கொண்ட ஹம்ப் பேக்(Hump Back) இனத்தை சேர்ந்த திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியிருப்பதை மக்கள் கண்டனர்.

உடனே கடல் உயிரியல் நிபுணர்களுக்கும் மற்றும் உள்ளூர் மக்களுக்கும் தகவல் தந்தனர். தகவல் அறிந்த அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அந்த திமிங்கலத்தை காப்பாற்ற சுமார் 3௦௦ பேர் அங்கு கூடி, கடல் தண்ணீர் கரைக்கு வர ஒரு வழியை உருவாக்கினர். இரவு முழுவதும் அதன் அருகிலிருந்து, அதை குளுமையுடன் இருக்க அதற்கு தேவையான தண்ணீரை தர, பலர் இரவு முழுவதும் அதனுடன் இருந்தனர். அது உயிருடன் இருந்த போதிலும், அதனால் சரியாக மூச்சு விடமுடியவில்லை என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

சுமார் 4 டன் எடையுடைய அந்த குட்டி திமிங்கலம் தனது தாயிடமிருந்து பிரிந்து அங்கு கரை ஒதுங்கியிருக்க கூடும் என்று கடல் உயிரியல் நிபுணர்கள் தெரிவித்தனர். பல நேரம் போராட்டதிற்கு பிறகு, அதை மீண்டும் கடலுக்குள் தள்ளப்பட்டது. அது கடலுக்குள் மெல்ல நீந்தி செல்வதை கண்ட மக்கள், தங்கள் முயற்சி வெற்றியடைந்ததை கண்டு கைத்தட்டி ஆர்பரித்தனர்.

மேலும் படிக்க