August 6, 2018
தண்டோரா குழு
தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நிலையில் திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது குடும்ப உறுப்பினர்கள் காவேரி மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார். இதற்கிடையில்,கடந்த ஜூலை 27-ம் தேதி இரவு கருணாநிதிக்கு ரத்த அழுத்தக் குறைவு ஏற்பட்டதால் நள்ளிரவில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து,குடியரசுத்தலைவர், துணை குடியரசுத் தலைவர் வெங்கய்யா நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சென்னை காவேரி மருத்துவமனைக்கு வந்து கலைஞர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்றிந்து வருகின்றனர்.
இந்நிலையில், காவிரி மருத்துவமனையில் தொடர்ந்து, 10 வது நாளாக சிகிச்சை பெற்று வரும் கருணாநிதி உடல் நிலையில் இன்று திடீர் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இன்று ( 6ம் தேதி) காலை முதல் திமுக செயல் தலைவர் ஸ்டாலின், எம்.பி., கனிமொழி, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, முதன்முறையாக கருணாநிதியின் மனைவி தயாளு மற்றும் துணைவி ராஜாத்தி ஆகியோர் வந்துள்ளனர்.