கருணாநிதி, உடல் நலிவுற்றிருக்கும் செய்தி கேட்டு இரண்டு, மூன்று தினங்களாக தூக்கம் வரவில்லை என நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனை வெளியே ஏராளமான திமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர். கருணாநிதியின் உடல்நிலை சீராக இருப்பதாக காவிரி மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நேற்று முதலே ஏராளமான தொண்டர்கள் குவிந்துள்ளதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
இந்நிலையில், காவிரி மருத்துவமனைக்கு வந்த நாஞ்சில் சம்பத் கருணாநிதி உடல் நலம் குறித்து
செயல் தலைவர் முக .ஸ்டாலினிடம் கேட்டறிந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத்,
பெரியாரின் தலை மாணாக்கராய், அண்ணாவின் தம்பியாய் விளங்கும் கருணாநிதி, உடல் நலிவுற்றிருக்கும் செய்தி கேட்டு கண்ணீர் வடிக்கிறேன். 1986-ல் கோவை சிதம்பரம் திறந்தவெளி மைதானத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அரசியல் சட்டத்தை தீயிட்டு கொளுத்த வேண்டும் என தீர்மானம் இயற்றிய மாநாட்டில் பாரதிதாசன் உருவப்படத்தை திறந்து வைத்து என்னை அரசியலுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இளம்பருவத்திலிருந்தே என்னை ஆட்கொண்ட தலைவர் அசைவற்று படுத்திருப்பதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவருடைய நிழலில் வளர்ந்தவன் நான். இன்று அசைவற்று படுத்திருக்கிறார். அதிர்ச்சியை தாங்க முடியவில்லை. இரண்டு, மூன்று தினங்களாக தூக்கம் வரவில்லை. விரல் நோக எழுதியவர், குரல் தேய பேசியவர், கால் தேய நடந்தவர் பிடறுகின்ற சிங்கம் போல் எழுந்து வர வேண்டும் என யாசிக்கிறேன்” என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
ஜெம் மருத்துவமனை மற்றும் இந்திய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை சங்கம் சார்பில் தேசிய கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மாநாடு மற்றும் மேம்பட்ட மருத்துவ பயிற்சி
வி.ஜி.எம். அறக்கட்டளை மற்றும் கரூர் வைஸ்யா வங்கி இணைந்து அதிநவீன இரத்த வங்கியை தொடங்கியுள்ளது
சுந்தரி கிருஷ்ணகுமார் காலமானார்
விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய கேம்போர்டு இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள்
ஸ்கோடா பிராண்ட் இந்தியாவில் நன்கு வலுப்படுத்தி, 2025-ஆம் ஆண்டு ஒரு வளர்ச்சியின் ஆண்டாக உருவாகிவருகிறது
கோவையில் 3 நாட்கள் நடைபெறும் ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025 இன்று துவங்கியது !