August 10, 2018
தண்டோரா குழு
கருணாநிதியின் எல்லா கனவுகளையும் தொண்டர்களின் துணையோடு சாதித்துக் காட்டுவேன் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக,திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில்,
உழைப்பு, உழைப்பு, உழைப்பு என்ற 3 வார்த்தைகள்தான் திமுக தலைவர் கருணாநிதி விட்டுச் சென்ற மந்திரச் சொற்கள்; மூன்று வேளையும் என்னை இயக்கப்போகும் சாவியும் அதுதான்.அந்த உழைப்பு, கட்சியின் லட்சியங்களை வென்று காட்டும். தமிழகத்தின் உரிமைகளை பெற்றுத்தரும் வகையிலான அந்த உழைப்பு, கருணாநிதியின் கனவுகளை விரைவில் நனவாக்கும்.திமுக தலைவர் கருணாநிதியின் எல்லா கனவுகளையும் தொண்டர்களின் துணையுடன் சாதித்து காட்டுவேன் என கூறியுள்ளார்