August 20, 2026
தண்டோரா குழு
கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில் கணபதி பகுதியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில்,போக்குவரத்து காவல்துறை சிறப்பு துணை ஆய்வாளர் லாவண்யா மற்றும் கான்ஸ்டபிள் தமிழரசன் ஆகியோர் வாகன ஓட்டிகளிடம் சாலை விதிகளை கடைப்பிடிப்பதன் அவசியத்தை எடுத்துரைத்தனர்.மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல், செல்போன் பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டுதல், அதிவேகம் உள்ளிட்ட விதிமீறல்களை தவிர்க்குமாறு அறிவுறுத்தினர்.
மேலும்,கரடி மற்றும் முயல் பொம்மை உருவங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியதுடன், விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், வாகன ஓட்டிகளுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
“சாலை விதிகளை கடைப்பிடிப்போம்; விபத்துகளைத் தவிர்ப்போம்” என்ற விழிப்புணர்வு கருத்துடன் நடைபெற்ற இந்நிகழ்ச்சி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றது.