• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கம்ப்யூட்டர் பாபா சாமியார் நர்மதா நதி பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவராக நியமனம்

March 11, 2019 தண்டோரா குழு

நர்மதா நதி பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவராக கம்ப்யூட்டர் பாபா சாமியாரை மத்தியப்பிரதேச மாநில அரசு நியமித்துள்ளது.

நாம்தேவ் தாஸ் தியாகி ((Namdev Das Tyagi)) என்ற கம்ப்யூட்டர் பாபா, சிவ்ராஜ் சிவ்கான் தலைமையிலான முந்தைய பாஜக ஆட்சியில் அமைச்சருக்குரிய அந்தஸ்தை பெற்றிருந்தார். நர்மதா நதியின் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினராகவும் இருந்த அவர், பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதில் இருந்து விலகினார்.

இந்நிலையில், தற்போது கம்யூட்டர் பாபாவை நர்மதா நதியின் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவராக கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நியமனம் செய்துள்ளது.ஆனால் அவருடைய அந்தஸ்து குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தனக்கு பொறுப்பு வழங்கியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி கூறிக் கொள்வதாக கம்ப்யூட்டர் பாபா தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க