March 11, 2019
தண்டோரா குழு
நர்மதா நதி பாதுகாப்பு அறக்கட்டளையின் தலைவராக கம்ப்யூட்டர் பாபா சாமியாரை மத்தியப்பிரதேச மாநில அரசு நியமித்துள்ளது.
நாம்தேவ் தாஸ் தியாகி ((Namdev Das Tyagi)) என்ற கம்ப்யூட்டர் பாபா, சிவ்ராஜ் சிவ்கான் தலைமையிலான முந்தைய பாஜக ஆட்சியில் அமைச்சருக்குரிய அந்தஸ்தை பெற்றிருந்தார். நர்மதா நதியின் பாதுகாப்புக் குழுவின் உறுப்பினராகவும் இருந்த அவர், பாஜகவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அதில் இருந்து விலகினார்.
இந்நிலையில், தற்போது கம்யூட்டர் பாபாவை நர்மதா நதியின் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவராக கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு நியமனம் செய்துள்ளது.ஆனால் அவருடைய அந்தஸ்து குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. தனக்கு பொறுப்பு வழங்கியதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நன்றி கூறிக் கொள்வதாக கம்ப்யூட்டர் பாபா தெரிவித்துள்ளார்.