• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கனிமொழி வெற்றியை எதிர்த்து தமிழிசை சவுந்திரராஜன் வழக்கு..!

July 8, 2019 தண்டோரா குழு

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., எம்.பி., கனிமொழியின் வெற்றியை எதிர்த்து அவரை எதிர்த்து தேர்தலில் போட்டியிட்ட பா.ஜ., தலைவர் தமிழிசை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 8) வழக்கு தொடர்ந்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் கனிமொழி போட்டியிட்டார். அவரை எதிர்த்து மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் கனிமொழி 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்.பி. ஆக பதவியேற்றார்.

இதற்கிடையில், தேர்தல் நடந்து கிட்டத்தட்ட 3 மாதம் ஆன நிலையில், கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கான மனுவை அவர் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில் தேர்தல் பிரசாரத்தின் போது ஆரத்தி எடுத்தவர்களுக்கு திமுக தரப்பில் பணம் கொடுக்கப்பட்டதாக தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க