• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கத்தார் நாட்டிற்கு வரும் பாகிஸ்தான் சுற்றுலா பயணிகளுக்கு “Visa on Arrival” திட்டம் அறிமுகம்

August 31, 2017 தண்டோரா குழு

கத்தார் நாட்டிற்கு செல்லும் பாகிஸ்தான் நாட்டினருக்கு “Visa on Arrival” என்னும் திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டிலிருந்து கத்தார் நாட்டிற்கு வரும் பாகிஸ்தான் நாட்டின் சுற்றுலா பயணிகள், கத்தார் நாட்டின் விமான நிலையத்தில் வந்திறங்கிய பிறகு, அந்த நாட்டில் சுமார் 3௦ நாட்கள் தங்க “Visa on Arrival” வழங்கப்படும் என்று அந்நாடு தெரிவித்துள்ளது. அவர்கள் 3௦ நாட்களுக்கு பிறகு, அங்கேயே தங்க விரும்பினால், அவர்களுடைய விசாவை நீடித்துக்கொள்ளலாம்.

கத்தார் நாட்டிற்கு வரும் பாகிஸ்தான் சுற்றுலா பயணிகள், குறைந்தது 6 மாதம் செல்லுப்படியாகும் கடவுசீட்டை வைத்திருக்க வேண்டும். அங்கிருந்து திரும்பி தங்கள் நாட்டிற்கு போவார்கள் என்பதை உறுதிப்படுத்தும் விமான பயணசீட்டு அவர்களிடம் இருக்க வேண்டும் என்று கத்தார் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் இந்தியா உள்ளிட்ட 80 நாடுகள் விசா இல்லாமல் கத்தார் நாட்டிற்கு வரலாம் என்னும் திட்டத்தை அந்நாடு அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க