• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கடை நடத்தி வியாபாரம் செய்திட அனுமதி வழங்க வேண்டும் – வியாபாரிகள் மனு

August 25, 2020 தண்டோரா குழு

கோவையில் தற்காலிகமாக செயல்பட்டுவரும் அண்ணா தினசரி மார்க்கெட்டை மறுபரிசீலனை செய்து தினசரி மார்க்கெட்டிற்கு கடை நடத்தி வியாபாரம் செய்திட அனுமதி வழங்க வேண்டும் என வியாபாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தை தினசரி மார்க்கெட் உள்ளிட்டவைகள் சமூக இடைவெளி இல்லாமல் நோய் தொற்று பாதிப்பு ஏற்படுவதால் தற்காலிகமாக கல்லூரி மைதானம், பேருந்து நிலையம் உள்ளிட்டவைகளில் காய்கறி சந்தைகள் செயல்பட்டு வந்தன.தற்போது கோவை தடாகம் சாலையில் உள்ள ஜிசிடி கல்லூரி மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டுவரும் அண்ணா தினசரி மார்க்கெட்டை மறு பரிசீலனை செய்து சாய்பாபா காலனி தினசரி மார்க்கெட்டினை சீரமைத்து சமூக இடைவெளியுடன் மீண்டும் கடை நடத்தி வியாபாரம் செய்யவும், அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு வியாபாரிகளுக்கு உரிய அனுமதி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வியாபாரிகள் மனு அளித்தனர்.

மேலும் படிக்க