• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கஞ்சிகாய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்ட தேசிய பஞ்சாலை கழக ஊழியர்கள்

August 27, 2018 தண்டோரா குழு

புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கோரி தேசிய பஞ்சாலை கழக ஊழியர்கள் எட்டாவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கஞ்சிகாய்ச்சும் போராட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

தமிழகத்தில் ஏழு பஞ்சாலைகள் தேசிய பஞ்சாலை கழகத்தின் கீழ் இயங்கி வருகின்றது.பஞ்சாலை தொழிலாளர்களுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சம்பள ஒப்பந்தம் பேசப்பட்டு வழங்கப்பட்ட நிலையில்,ஐந்தாண்டுகளுக்கு மேல் ஆகியும் இதுவரை சம்பள ஒப்பந்தம் பேசி முடிக்கப்படாமல் நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது.

இதனால் பஞ்சப்படி,வீட்டு வாடகைப்படி,பணி மூப்பு அடிப்படையில் சம்பள உயர்வு,உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.எட்டாவது நாளாக நடைபெறும் இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்றைக்கு தொழிலாளர்கள் கஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டு,உடனடியாக சம்பள ஒப்பந்தத்தை பேசி முடிக்க வலியுறுத்தினர்.

இதனையடுத்து செஞ்சிலுவை சங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.மேலும் ஆறு முறை நிர்வாகத்துடன் தொழிற்சங்க தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க