• Download mobile app
01 Jun 2026, MondayEdition - 3764
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒடிசா இளைஞர் கைது

April 8, 2023 தண்டோரா குழு

கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதன் அடிப்படையில் தனிப்படை காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள காளிபாளையம் பிரிவுக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தனபதன்(28) கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். போலீசார் தனபதனை கைது செய்து அவரிடமிருந்து ரூ.30,000 மதிப்புள்ள 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தனிப்படை போலீசார் கூறுகையில்,

ஒடிசா மாநில இளைஞர் இங்கு முதலில் கூலி வேலைக்கு தான் வந்துள்ளார். தனியார் தொழில்நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். கூலி வேலையில் அவருக்கு போதுமான பணம் கிடைக்கவில்லை என கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுள்ளார்,” என்றனர்.

மேலும் படிக்க