• Download mobile app
18 Jun 2025, WednesdayEdition - 3416
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கஜா புயல் நிவாரணம் தந்த சிறுமிக்கு சைக்கிள் வழங்கி முதலமைச்சர் பாராட்டு

December 3, 2018 தண்டோரா குழு

கஜா புயல் நிவாரண நிதிக்காக தான் சேமித்து வைத்த பணத்தை கொடுத்த சிறுமியை பாராட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சைக்கிளை பரிசாக வழங்கினார்.

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளானதால் மக்களின் இயல்பு நிலை மாறியுள்ளது. தற்போது வரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தேவையான பொருட்களையும், நிதிஉதவிகளை வழங்கி வருகின்றனர்.

அந்தவகையில் சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் என்பவரது மகள் அக்சயாஸ்ரீ. இவர் தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளிக்கு சென்று வருவதற்காக சைக்கிள் வாங்க அவர் சேமித்து வைத்த 520 ரூபாயை கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பிவைத்தார். இதனையறிந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மாணவி அக்சயாஸ்ரீயை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்து சிறுமிக்கு புதிய மிதிவண்டி ஒன்றை பரிசாக வழங்கினார்.

மேலும் படிக்க