• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கஜா புயல் நிவாரணமாக ரூ1,146 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு

December 31, 2018 தண்டோரா குழு

கஜா புயல் நிவாரணத்திற்கு தமிழகத்திற்கு ரூ.1,146 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

கஜா’ புயல் தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. புயலால் டெல்டா மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். உயிர் சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டு அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் முடங்கியுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை கணக்கிட்டு சீரமைப்பு பணிக்காக மத்திய அரசு ரூ.15 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் முதல்கட்டமாக ரூ. 1500 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும் பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில், கஜா புயல் நிவாரணத்திற்கு தமிழகத்திற்கு ரூ.1,146 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையிலான உயர்மட்டக்குழு கூட்டத்தில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.353.7 கோடி ஒதுக்கப்பட்டது.

மத்திய அரசிடம் தமிழக அரசு 14,910 கோடி ரூபாய் கேட்டிருந்த நிலையில் தற்போது 1146கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க