• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓ.பி.எஸ்,ஈ.பி.எஸ் இருவருக்குமே கட்சியில் ஆதரவு இல்லை – முன்னாள் எம்.எல்.ஏ ஆறுக்குட்டி !

June 17, 2022 தண்டோரா குழு

கோவை விளாங்குறிச்சியில் உள்ள தனது இல்லத்தில் கவுண்டம்பாளையம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அதிமுகவைச் சேர்ந்த ஆறுகுட்டி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

அதிமுக தொண்டனாக கருத்து சொல்கின்றேன். உள்ளாட்சி தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்து இருக்கிறது.அதிமுக ஆட்சியில் இருந்தபோதே பல முறை உள்ளாட்சி தேர்தல் நடத்த கேட்டும் நடத்தாமல் இருந்து விட்டனர். தற்போது கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தனித்தனியாக பேட்டி கொடுக்கின்றனர்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தி இருந்தால் ஆட்சி போயிருக்காது.இரு கோஷ்டியாக பிரித்து அதிமுக சண்டை போட்டுகொண்டு இருக்கின்றனர்.ஒரு விபத்தின் காரணமாக இருவரும் பதவிக்கு வந்து விட்டனர். இருவரும் சண்டை போடுவது சரியில்லை.ஒன்றரை கோடி தொண்டர்களை கேட்டும் எதுவும் செய்யவில்லை.
ஓ.பி.எஸ்,இ.பி.எஸ் இருவரும் தாங்கள் இருக்கும் வார்டுகளை கூட கைப்பற்ற முடியவில்லை.அதிமுக சாதிகட்சியாக சென்று கொண்டிருக்கிறது.

அதிமுக துரோக கட்சியாக மாறி விட்டது. மேல் இருந்து கீழே வரை மாறிவிட்டது.இயக்கத்தை காணாமல் ஆக்கி விட்டனர்.அதிமுகவில் கோஷ்டி இருந்ததில்லை.ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் சுத்தமானவர்கள் இல்லை.கீழ் இருந்து கட்சியில் மேல் வரை வந்தவன் நான்..எனக்கு சீட் இல்லை
என்றனர். என்னுடன் யார பேச வில்லை. நான் ஒதுங்கி விட்டேன்.

சசிகலா வர வேண்டும் என சொல்ல வில்லை. யாரையாவது அனைவரும் சேர்த்து தேர்ந்தெடுங்கள்.ஒற்றை தலைமை வரட்டும். இவர்கள் இருவரும் வேண்டாம்.சசிகலா, தினகரன் என அனைவரையும் சேர்த்து கட்சி இயங்க வேண்டும்.அதிமுகவினர் தற்போது வேதனையில் இருக்கின்றனர். இருவரும் ஒதுங்கிக்கொள்ளுங்கள்வேறு யாராவது தலைமை பொறுப்பிற்கு வரட்டும்.நன்றி மறந்தவர்களாக இருவரும் இருக்கின்றனர். ஜெ இருந்த போது இருந்த மாதிரியாக கட்சி இல்லை.

ஏன் உள்ளாட்சி அமைப்புகளில் அதிமுக வெற்றி பெற வில்லை?இயக்கம் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கின்றோம்.அன்வர் ராஜாவை ஏன் நீக்கினீர்கள்? கட்சிக்காக பேசியதால் நீக்கினார்கள். எம்.ஜி.ஆர்.காலத்தில் இருந்து கட்சியில் இருப்பவர் அவர் பேட்டி கொடுப்பதால் என்னை நீக்கினால் நீக்குங்கள். சசிகலாவை ஏன் மோசமாக பேச வேண்டும். எடப்பாடி பழனிசாமியை கையை பிடித்து முதல்வர் என அடையாளம் காட்டியவர் அவர்.

ஜெயலலிதா மறைந்த பிறகு 4 வருடம் அமைச்சர் ஆபீசுக்கு சென்றால் உரிய மரியாதை இருக்காது.வேறு யாராவது தலைமை பொறுப்பிற்கு வரட்டும்.ஓ.பி.எஸ்,ஈ.பி.எஸ் இருவருக்குமே கட்சியில் ஆதரவு இல்லை. அதிமுக சோதனைகளை கடந்து வந்த கட்சி. இனி இருவரும் ஒன்று சேர்ந்து இயங்க வாய்ப்பில்லை அதிமுக சாதிக்கட்சியாக சுருங்கி விட்டது.தயவு செய்து அதிமுகவை சாதிக்கட்சியாக்கி விடாதீர்கள்.சீட் கொடுக்காதது கூட வருத்தமில்லை. என்னை அழைத்து கூட வேலுமணி பேசவில்லை. அம்மாவே என்னை அழைத்து சீட் வழங்கினார்.

பிரதமர் கூறியதால் துணை முதல்வர் பதவி ஏற்றேன் என ஒ.பி.எஸ் வெளிப்படையாக பேசி இருக்க கூடாது. பா.ஜ.க கட்சியை வளர்த்து கொண்டு விட்டனர்.அதிமுக சாதி கட்சியாக இரு பிரிவாக மாறி விட்டது.இருவரும் இணைந்து செயல்பட வேண்டும்சசிகலா, தினகரனுடன் எனக்கு எவ்வித தொடர்புமில்லை.இருவரும் சேர்ந்து என்னை நீக்கினால் சந்தோஷம். இது போன்ற நிலை கட்சிக்கு வரும் என எதிர்பார்த்தேன் வந்துவிட்டது.

அரசியல் வேண்டாம் என முடிவு செய்து விட்டேன். வேறு கட்சியில் இருந்தும் அழைத்தார்கள்.போகவில்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி கூட என்ன அழைத்தார் ஆனால் நான் செல்லவில்லை.அதிமுக விற்கு எதிராக செயல்படவில்லை. ஒ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் மக்கள் தலைவர்கள் கிடையாது.மாவட்ட தலைவர்கள் அதிமுகவில் இருக்கின்றேன். ஒ.பி்.எஸ்,இ.பி.எஸ் தலைமையின் கீழ் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்க