• Download mobile app
09 Jun 2025, MondayEdition - 3407
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்தும் பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்து

April 4, 2019 தண்டோரா குழு

நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஓ.பன்னீர் செல்வம் பயன்படுத்தும் பிரசார வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கட்சியின் மூத்த தலைவர்கள் பிரச்சாரம் செய்யப்போகும் தொகுதியில் அவர்களுக்காக சிறப்பு வாகனங்களை முன்கூட்டியே கொண்டு செல்வது வழக்கம்.

இதற்கிடையில், நீலகிரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் சென்றிருந்தார். இதற்காக சென்னையிலிருந்து, ஊட்டிக்கு நேற்று இரவு 9 மணிக்கு சிறப்பு பிரச்சார வாகனம் கொண்டு செல்லப்பட்டு நிறுத்தப்பட்டது. அங்கு பராமரிப்பு பணிகளை முடித்துக் கொண்டு, இன்று காலை கூடலூருக்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்நிலையில், ஊட்டியிலிருந்து, கூடலூர் செல்லும் பாதை மிகவும் சரிவான என்பதால் ஊட்டி- கூடலூர் நடுவே, நடுவட்டம் என்ற பகுதியில் வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது, தலைகுப்புற கவிழ்ந்தது.வாகனத்தை ஓட்டுநர் இயக்கிய நிலையில், உடன் ஒரு உதவியாளர் இருந்துள்ளார். இந்த விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை.ஓபிஎஸ் பிரச்சாரம் செய்ய வேண்டிய வாகனம் கவிந்து விபத்திற்குள்ளானதால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் படிக்க