• Download mobile app
05 May 2026, TuesdayEdition - 3737
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஓய்வில்லாதவர் அமர்ந்த இருக்கை : நிரந்தர ஓய்வில் இருக்கும் தருணம்

August 8, 2018 தண்டோரா குழு

திமுக தலைவர் கருணாநிதி பயன்படுத்திய வந்த நாற்காலி புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக் குறைவால் நேற்று மாலை காலமானார். இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டது. அங்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர்,லட்சக்கணக்கான தொண்டர்கள் கண்ணீர் மல்க கருணாநிதியின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு துவங்கியது. தற்போது பாசத்தம்பி அண்ணா நினைவிடத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், கருணாநிதி உடல்நலக்குறைவால் இருக்கும் போது கடந்த சில வருடங்களாக அவர் பயன்படுத்தி வந்த சக்கர நாற்காலியின் புகைபடம் சமூக வலைத்தளங்களில் தற்போது பரவி வருகிறது.இதனால் தொண்டர்கள் அந்த புகைப்படம் படத்துடன் உருக்கமான வரிகளில் தங்கள் கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க